ரணிலின் உத்தரவை உதாசீனப்படுத்தி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!
மேல் மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் பிரதமர் அலுவலகம் முன்பாக பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் மீண்டும் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைதாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மக்கள் போராட்டத்தை அடுத்து நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வன்முறையை தூண்டும் வகையில் சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைதுசெய்ய படையினர் மற்றும் பொலிஸாருக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எனினும் அதனை பொருட்படுத்தாத மக்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துவருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.