தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்த பயணிகள் சேவை கப்பல்!
நாகபட்டினத்தில் இருந்து யாழ்.காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்றையதினம் (16-08-2024) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி, நாகபட்டினத்தில் இருந்து நண்பகல் 12 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த பயணிகள் கப்பல் 5 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.
குறித்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.
இதேவேளை, கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் அன்று காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
இவ்வாறான நிலையில் இன்றையதினம் (16-08-2024) மீண்டும் பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.