மட்டக்களப்பில் அதிகாலை பயங்கர விபத்து... பயணிகளுக்கு நேர்ந்த நிலை?
மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பேருந்து கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.
விபத்தில் சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், பேருந்து சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.