இந்நாள் முன்னாள் ஜனாதிபதிகளின் இரங்கல் செய்தி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது டுவிட்டர் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். “ஹீராபென் மோடி ஸ்ரீமதியின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.
தனது அன்பிற்குரிய தாயை இழந்து வாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Deeply saddened to hear of the demise of Smt. Heeraben Modi. My heartfelt condolences to Prime Minister @narendramodi ji on the loss of his beloved mother. Our thoughts and prayers are with the PM and his family in this hour of grief. pic.twitter.com/1MxGHMbLms
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) December 30, 2022
இந்த துயரமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், தமது 99 ஆவது வயதில் இன்று அதிகாலை காலமானார் .