நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரின் தந்தை மீது வாள்வெட்டு தாக்குதல்! சந்தேக நபர் கைது
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்று தந்தை மீது தாக்குதல் நடாத்திய சந்தேகநபர் இன்றையதினம் (29-12-2024) கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் கடந்த 2024.11.12 அன்று இரவு கொழும்புதுறையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அதே தினத்தில் மேலும் 3 வீடுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.