ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மோதல்: அதிகாரி, ஊழியர் உட்பட மூவர் வைத்தியசாலையில்!
ரயில்வே ஊழியர்களுக்கும் குழுவொன்றிற்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ரயில் நிலைய அதிபர், ஊழியர் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (02-10-2023) பாணந்துறை ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சம்பவத்தில் காயமடைந்த மகன் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறை சாகர மாவத்தையில் வசிக்கும் 50 வயதுடைய ஒருவரும் 23 வயதான அவரது மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் பயண சீட்டு பெறுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் அடிப்படையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.