இலங்கையை போன்று பொருளாதார நெருக்கடியால் பற்றி எரியும் பாகிஸ்தான்!(Video)
கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா மற்றும் அரசியல் நெருக்கடிகளால் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது.
அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களா நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது மெல்லமெல்ல மீண்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் இலங்கையை போன்றதொடு நிலமை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருவதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதனால் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
உணவு பொருட்களுக்காக மக்கள் அடிதுக்கொள்ளும் நிலமை அங்கு உருவாகியுள்ளது. இந்நிலையில் அது தொடர்பிலான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.