IPL யை தொடரைத் தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைப்பு
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் (08) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த பெஷாவர் ஸால்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையிலான பிஎஸ்எல் போட்டி, மைதானத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடந்ததை அடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (BCB) மீதமுள்ள 8 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE ) மாற்ற முடிவு செய்திருந்தது, ஆனால் பின்னர் UAE இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தொடர் முழுவதும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் "ஆபரேஷன் சிந்தூர்" மற்றும் அதற்கு பாகிஸ்தானின் பதிலடி தாக்குதல்கள், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக நடந்தவை, இந்த ஒத்திவைப்புக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
இதேவேளை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI ) இன்று (09) IPL 2025 தொடரை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துவதாக அறிவித்தது.
நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி, மின்சாரத் தடையால் 10.1 ஓவர்களுக்குப் பிறகு கைவிடப்பட்டது.
மே 11 அன்று தரம்சாலாவில் நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி, பாதுகாப்பு காரணங்களால் அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டது.
தேசிய பாதுகாப்பு மற்றும் வீரர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, IPL தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது, மேலும் மீதமுள்ள போட்டிகளுக்கான திகதிகள் மற்றும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என BCCI தெரிவித்துள்ளது.