கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதம்...பரிதாபமாக உயிரிழந்த நபர்!
கண்டி - தெல்தெனிய, கரல்லியத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சீமெந்து தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கிய நபர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் கட்டுகித்துல, உடிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.