வவுனியாவில் ஊடகவியலாளரை அச்சுறுத்திய ஓமந்தை பொலிஸ் நிலைய அதிகாரி!
வவுனியா - ஓமந்தை, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செய்தி அறிக்கையிடலின் போது ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறை விளைவிதது அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் ஓமந்தை கமநல அபிவிருத்தி நிலையம் முன்பாக இன்றைய தினம் (20-09-2023) இடம்பெற்றுள்ளது.
ஓமந்தை, சின்ன விளாத்திக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அருகில் கற்குவாரி அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஓமந்தை கமநல அபிவிருத்தி நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, குறித்த பகுதியில் ஊடகவியலாளர்கள் செய்தி அறிகையிடலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செயற்பட்ட போது அதனை ஊடகவியலாளர் ஒருவர் காணொளியில் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த ஊடகவியலாளரின் காணொளி பதிவு செய்த தொலைபேசியை தட்டி குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்தி தாக்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து அங்கு நின்ற ஏனைய ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் பொலிஸ் அதிகாரியுடன் முரண்பட்டதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் வவுனியா ஊடக அமையம் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர்.