மூன்று சிறுவர்களின் உயிரை காத்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள்!
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
By Sulokshi
கொழும்பு - கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த 3 சிறுவர்களும் கடலில் நேற்று (01) பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த வேளையில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் உடனடியாக விரைந்து 3 சிறுவர்களையும் மீட்டு, அடிப்படை முதலுதவி அளித்த பின், களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவத்தில் கொழும்பு 9 இல் வசிக்கும் 16 வயதுடைய 3 சிறுவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US