ஓரினச்சேர்க்கையாளர்களை நிர்வாணமாக காணொளி எடுத்து அச்சுறுத்தல்; மூவர் கைது
ஓரினச்சேர்க்கையாளர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்ற மூன்று சந்தேக நபர்கள் மிரிஹான தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நீண்ட காலமாக இவ்வாறு அவர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக ஊடகமொன்றில் அறிமுகமான பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரிடம் அவரைப் போன்று பல ஓரினச்சேர்க்கையாளர்களை அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி புறக்கோட்டை, வெஹரகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வரவழைத்துள்ளனர்.
ஓரினச்சேர்க்கையாளர்களின் காணொளிகள்
அங்கு சந்தேக நபர்கள் அந்த நபரை தாக்கி நிர்வாணமாக காணொளி எடுத்து அதனை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தி ஒரு இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் இது தொடர்பில் மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை கைதான சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்ட போது ஓரினச்சேர்க்கையாளர்களின் காணொளிகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர்கள் 41 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.