கறுப்புச் சந்தை டொலர்: நிதியமைச்சர் பசில் வெளியிட்ட பகீர் தகவல்!
வடகொரியாவிடமிருந்து கறுப்புச் சந்தையில் பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, ஆயுதம் வாங்கியதை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த விடயத்தை சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதே காலப்பகுதியில் எரிபொருளுக்கு செலுத்துவதற்காக இலங்கை கறுப்புச் சந்தையில் இருந்து டொலர்களைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எரிபொருள் ஏற்றுமதிக்கு டொலர்கள் தேவைப்பட்டதாக நிதி அமைச்சர் பசில் தெரிவித்துள்ளார். இதன்போது ஏனைய அதிகாரிகளுடன் கொழும்பில் உள்ள புறக்கோட்டைக்குச் சென்று வர்த்தகர்களிடம் டொலர்களை திரட்டியதாகத் தெரிவித்தார்.
இவ்வாறான கொள்வனவுகள் தொடர்பாக இலங்கை அதிகாரிகள் பல வருடங்களாக மறுத்து வந்ததை நிலையில் அவரின் இந்த கருத்து உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, ஆயுதங்கள் உட்பட அணு ஆயுத பரிசோதனை காரணமாக ஐ.நா.வின் வர்த்தக தடையை எதிர்கொண்டுள்ள வட கொரியாவிடமிருந்து தடைகளை மீறி இலங்கை இந்த கொள்வனவை மேற்கொண்டுள்ளதை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது நாட்டின் பொருளாதாரம் தனது வெளிநாட்டு கையிருப்பு மீது முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில் உண்டியல் கறுப்புச் சந்தை பண கொடுக்கல் வாங்கல் முறைமை நியாயமானது என்ற வகையிலும் பசில் ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.