க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறு குறித்து அடுத்த வாரம் தீர்மானம்
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற க. பொ.த.சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் அடுத்த வாரத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் நுண்கலை பாடத்துக்கான செயன்முறைப் பரீட்சை இதுவரை இடம்பெற வில்லை என்றும் அதன் காரணமாகவே க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தாமதமாவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்போது ஆசிரியர்கள் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள நிலையில் நுண்கலை செயன்முறைப் பரீட்சை நடத்துவதற்கு முடியாதுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாவதாகவும் குறிப்பிட்ட அவர், எவ்வாறெனினும் அடுத்த வாரத்தில் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.