உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு நிதிஉதவி வழங்கிய அடைக்கலம் கொடுத்த நியுசிலாந்து!
உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு நிதிஉதவி வழங்கிய நபருற்கு நியுசிலாந்து அகதி அந்தஸ்த்து வழங்கியுள்ளதாக ரேடியோ நியுசிலாந்து தெரிவித்துள்ளது. குறிந்த நபர் தெரியாமல் நிதி வழங்கியவர் எனவும் ரேடியோ நியுசிலாந்து தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நபருக்கு பயங்கரவாத இலக்குகள் பற்றி எதுவும் தெரியாது என்றும், பணம் யாருக்கு செல்கின்றது எங்கிருந்து வருகின்றது என்பதும் தெரியாது என்பது குடிவரவு மற்றும் பாதுகாப்பு தீர்ப்பாயத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் உள்ள தனது உறவினர் மற்றும் முகவர் ஒருவருடன் இணைந்து குறித்த நபர் பணப்பரிமாற்ற திட்டம் மூலம் ஒரு மாதத்தில் பல தடவை பணம் அனுப்பியுள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் விசாரணைகளின் போது அவரது தமிழ் மனைவியை இலங்கை பொலிஸார் கைதுசெய்து சித்திரவதை செய்துள்ளனர்,பின்னர் பணம் வாங்கிக்கொண்டு அவரை விடுதலை செய்ததை தொடர்ந்து தம்பதிகள் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் போலிகடவுச்சீட்டில் நியுசிலாந்து சென்ற நிலையில் , அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஆதாரங்கள் நம்பகதன்மை மிக்கவை என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டிருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் கருதும் பணப்பரிமாற்ற நடவடிக்கையுடன் கணவர் தொடர்புபட்டுள்ளதால் அவர் இலங்கையில் சித்திரவதை செய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ளது.
கணவர் தனது நடவடிக்கைகள் மூலம் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கவில்லை என்றும், அவர்களது கொள்கைகளிற்கு ஆதரவளிக்கவில்லை என்பதுடன் தான் பரிமாற்றிய பணம் அவ்வாறானவர்களிற்கு சென்றது என்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நிதிவழங்கியவர்களை விசாரணை செய்து தண்டிக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் அழுத்தங்களை கருத்தில்கொள்ளும்போது கணவரிடமிருந்து தகவல்களை பெறுவதற்காக அல்லது அவரிற்கு தெரிந்திருக்காத தகவல்களை பெறுவதற்காக அதிகாரிகள் சித்திரவதைகளை பயன்படுத்தாமல் விடமாட்டார்கள் என கருதமுடியாது எனவும், கணவரிற்கு அவருக்கு கிடைக்கும் பணம் குறித்து சிறிதளவே தகவல் தெரிந்திருந்தது, அவர் முகவர் இல்லை, மாறாக கொழும்பில் முகவர்களிடமிருந்து பணத்தை பெற்று வங்கிகளில் வைப்பிலிடும் கூரியர் தனது வெளிநாட்டு உறவினர் மூலம் வெளிநாட்டு முகவர் தெரிவிக்கும் வங்கிக்கணக்குகளிற்கு அவர் பணத்தை வைப்பிலிடுவார் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கணவர் சிங்களவர் ஆனால் வெளிநாட்டு முகவர் முஸ்லீம்பெண் என்றும், அவரின் மனைவியின் சகோதரி முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்தது அதிகாரிகளின் கவனத்தை திசைதிருப்பியிருக்கலாம் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.