சிறுவர்களை பலியெடுக்கும் புதுவைரஸ்; 50 பேர்வரை பலி
வட இந்தியாவின் உத்தர மாநிலத்தில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக சிறுவர்கள் இடையே பரவிவருகின்ற ஒருவகை வைரஸ் காய்ச்சல் காரணமாக சிறுவர்கள் பலரும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொண்டை வலி, தலைவலி போன்ற சாதாரண காய்ச்சலுக்கு ஏற்படுகின்ற அறிகுறிகளே இந்த புதுவித வைரஸிற்கும் ஏற்படுகின்றதாக கூறப்படுகின்றது. அத்துடன் மேலதிகமாக கை, கால்களில் ஒருவித அடையாளமும் ஏற்படுகின்றது.
உத்தர மாநிலத்தில் 06 மாவட்டங்களில் குறைந்தது 50 பேர்வரை பலியாகியிருப்பதாகவும், அவர்களில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆக்ரா, மட்டுரா, மீன்புரி, ஏட்டா, கஸ்கன்ஜ், பிரோசாபாத் போன்ற மாவட்டங்களே இவ்வாறு பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.