மேல் மாகாணத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த புதிய இலக்கம் அறிமுகம்
மேல் மாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அது தொடர்பான தகவல்களைப் பொதுமக்களிடமிருந்து விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கும் புதிய WhatsApp (வட்ஸ்எப்) தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசேட செயற்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் 24 மணிநேரமும் இந்த வட்ஸ்எப் இலக்கம் ஊடாகத் தகவல்களை வழங்க முடியும்.

விசேட செயற்பாட்டு மையம்
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட செயற்பாட்டு மையத்தின் மூலம் இந்தத் தகவல்கள் கையாளப்படும்.
மேல் மாகாணத்தில் இடம்பெறும் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோதச் செயல்கள் தொடர்பான ரகசியத் தகவல்களை வழங்கலாம்.
ஈரான் போர் குறித்து வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் ; முக்கிய புள்ளியின் ராஜினாமாவால் ட்ரம்பிற்கு பேரிடி
தகவல் வழங்கும் நபர்களின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு முழுமையாகப் பேணப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் இலக்கம்: 0777 128 128
மேல் மாகாணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.