அரசு சேவை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
அரசு சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராக எஸ். ஏ. நிமல் சரணதிஸ்ஸ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் ஏனைய உறுப்பினர்களாக பி. சனத் பூஜித, ஈ. ஆர். வீரகோன், ஆர். கேதீஸ்வரன், ஜே. எம். ஆர். ஜெயசுந்தர, ஈ. ஏ. பி. என். எதிரிசிங்க, வைத்தியர் எஸ். ஏ. ஏ. என். ஜெயசேகர மற்றும் எம். எச். முகமது சமீல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்களை, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய உறுப்பினர்களிடம் கையளித்தார்.
அரசு சேவை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்டிருந்த உறுப்பினர் வெற்றிடங்களுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.