புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் அதிரடி கருத்தை வெளியிட்ட மஹிந்த
புதிய அமைச்சரவை நியமனம் பற்றி நான் எதுவும் பேசமாட்டேன்; தலையிடவும் மாட்டேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) நேரில் சென்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaska) தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ரணிலுக்கு மஹிந்தவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
அதில் இருவரும் தற்போதைய அரசியல், பொருளாதார விடங்கள் பற்றிப் பேசினர். அப்போது புதிய அமைச்சரவை நியமனம் பற்றியும் பேசப்பட்டது.
"புதிய அமைச்சரவை நியமனம் பற்றி நான் எதுவும் பேசமாட்டேன்; தலையிடவும் மாட்டேன். நீங்கள் யாரை வேண்டுமானாலும் நியமியுங்கள்" - என மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.