மெட்டாவுடன் இணைந்து உருவான புதிய AI நிறுவனம்
செயற்கை நுண்ணறிவு தற்போது பல துறைகளிலும் கால்பதித்துள்ளது.
இதனை பயன்படுத்தி விரைவாகவும், துல்லியமாகவும் பணிகளை மேற்கொள்ள முடிவதால் AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதில் முக்கியமாக ChatGPT, Gemini போன்ற பல்வேறு நிறுவனங்கள் AI துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்தநிலையில் இந்தியாவின் மிகப்பெரும் தொழில் நிறுவனமான ரிலையன்ஸும் (Reliance) தற்போது AI துறையில் தடம் பதித்துள்ளது.
'Reliance Intelligence' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய AI நிறுவனத்தில் Reliance 70% பங்குகளையும், Meta 30% பங்குகளையும் வைத்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் முதற்கட்டமாக இரு நிறுவனங்களும் சேர்ந்து ரூ.855 கோடி முதலீடு செய்ய உள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் AI இந்தியாவில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.