இலங்கை கடற்படையினரின் விசேட தேடுதல் நடவடிக்கை: சிக்கிய பொருட்கள்
தலைமன்னார் உறுமலை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் பல்வேறு விதமான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (16) அதிகாலை கடற்படையினர் தலைமன்னார் கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதோடு கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனை செய்தனர்.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 04 கிலோ மற்றும் 194 கிராம் எடையுள்ள கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் 4 பொதிகளும், 01 கிலோ மற்றும் 034 கிராம் எடையுள்ள ஹெராயின் ஒரு பொதி, சுமார் 05 கிலோ மற்றும் 254 கிராம் எடையுள்ள ஹாஷிஸ் 5 பொதிகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 94 மில்லியன் என கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.