யாழ். பல்கலையில் இறக்கப்பட்ட தேசிய கொடி; பறந்த கறுப்புகொடி
இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது. பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.
நல்லூரிலும் போராட்டம்
அதேவேளை நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் சிவகுரு ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சியில் உறவுகள் போராட்டம்
இலங்கையின் சுதந்திரம் தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நீதி கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இலங்கையில் 77 ஆவது சுதந்திரதினமான இன்று (04) முன்னெடுக்கப்பட்டுள்ளது.