நாசாவின் வரலாற்று சாதனை ; 50 ஆண்டுகளின் பின்னர் மனிதர்கள் நிலவை நோக்கி
50 ஆண்டுகளின் பின் நிலவை நோக்கிய மனிதப் பயணம் ஆரம்பம்: நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
அரை நூற்றாண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆர்டெமிஸ் II' (Artemis II) விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆர்டெமிஸ் II' விண்கலம், நெருப்புப் பிழம்புகளைக் கக்கியபடி நீல வானை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

ஏப்ரல் 1, புதன்கிழமை அமெரிக்க நேரப்படி மாலை 6:35 மணிக்கு 'ஸ்பேஸ் லோஞ்ச் சிஸ்டம்' (SLS) ரொக்கெட் மூலம் நான்கு விண்வெளி வீரர்களும் விண்ணில் பாய்ந்தனர்.
விண்கலம் விண்ணைச் சீறிப் பாய்ந்தபோது, அதன் பின்னாலிருந்து வெளியேறிய அடர்ந்த புகையினால் வானில் ஒரு நீண்ட வெண்ணிறப் பாதை உருவானது.
1972ஆம் ஆண்டின் 'அப்பல்லோ 17' திட்டத்திற்குப் பிறகு, மனிதர்கள் நிலவை நோக்கிப் பயணிப்பது இதுவே முதல் முறையாகும். 10 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த விண்கலம் நிலவில் தரை இறங்காது. நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்குத் திரும்பும். இந்தப் பயணத்தின் போது, வரலாற்றில் இதுவரை மனிதர்கள் பயணித்திராத மிக நீண்ட தொலைவை (பூமியிலிருந்து) இந்த வீரர்கள் அடையவுள்ளனர்.
ஏவுதலுக்கு முன்னதாக 'Launch Abort System' மின்கலம் மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகளில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள்; கண்டறியப்பட்டன.
எனினும், அவை உடனடியாகச் சீர்செய்யப்பட்டு விண்கலம் ஏவப்பட்டதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு சிற்றூர்தி (Minibus) அளவிலான சிறிய காப்ஸ்யூல் ஒன்றிலேயே இந்த நான்கு வீரர்களும் தமது 10 நாள் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
2028ஆம் ஆண்டு நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் நாசாவின் பாரிய இலக்கிற்கு, இந்த 'ஆர்டெமிஸ் II' திட்டத்தின் வெற்றி ஒரு மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.