அம்மிக்கல் அடியில் போதை மாத்திரைகள்; பெண் கைது
அம்மிக்கல் அடியில் போதை மாத்திரைகளை மறைத்து வைத்து பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மட்டக்குளி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து கைது 56 வயதுடைய பெண்ணாவார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளார்.
சோதனையில் 1,310 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து ஒரு மாத்திரை தல 100 ரூபா வீதம் இந்த போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.