நாட்டை விட்டு வெளியேறிய ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த மற்றுமொரு முக்கியஸ்தர்!
நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 03-04-2022ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த நாமல் ராஜபக்ஷ, அன்றிரவே டுபாய் சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நாமல் ராஜபக்ஷவின் குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியார்) ஏப்ரல் 02-04-2022 திகதி வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலையை தொடர்ந்து, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையிலேயே நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நாமல் ராஜபக்ஷவின் குடும்பம் டுபாயிலிருந்து மேற்கத்திய நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.