இலங்கை மகளிர் கிரிக்கெட் ‘ஏ’ அணியில் மன்னார் வீராங்கனை
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்த மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினியை வரவேற்கும் நிகழ்வு இன்று (28) காலை இடம்பெற்றது.
பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய பாடசாலை நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து குறித்த வீராங்கனையை வரவேற்றனர்.

மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தில் குறித்த வீராங்கனை மற்றும் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு இசை வாத்தியம் முழங்க மன்னார் பஜார் பகுதியூடாக மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வீராங்கனையை கௌரவித்தார். தொடர்ந்து குறித்த மாணவி அவரது சொந்த கிராமமான பேசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சதீஸ்குமார் சஜிந்தினி , பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய பாடசாலையின் பழைய மாணவியவார்.