பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ஷ
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் வானூர்தி கொள்முதல் விவகாரத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று (16) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஏற்கனவே கையூட்டல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

முன்னதாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.