கோட்டாபய காலத்தில் பூனையாய் இருந்த நாமல் , சாகர இன்று குரைக்கின்றனர்!
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் பூனைகள் போல நடந்துகொண்ட நாமல் ராஜபக்சவும், சாகரகாரியவசமும் தற்போது நாய்கள் போல குரைக்கின்றதாக பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்ச தெரிவித்துள்ளார்.
சமீபத்தைய அமைச்சரவை மாற்றம் குறித்து நாமல்ராஜபக்சவும் , சாகரகாரியவசமும் கடும் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாமலும், சாகரவும் மூளைகோளாறா என பரிசோதிக்கவேண்டும்
அமைச்சரவை மாற்றங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய முறையில் மேற்கொண்டுள்ளார் . இந்நிலையில் நாமலும், சாகரவும் அதனை எதிர்த்தால் அவர்கள் தங்களுக்கு மூளைகோளாறா என பரிசோதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக பொய் தெரிவிப்பதை விட சாகர காரியவசம் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடவேண்டும். எனினும் அவருக்கு இதற்கான துணிச்சல் உள்ளதா என நான் சந்தேகிக்கின்றேன் எனவும் நிமால் லான்ச தெரிவித்தார்.
அதேவேளை அமைச்சரவையை கோட்டபாய ராஜபக்ச நான்கு தடவை மாற்றியவேளை நாமல் அமைதியாகயிருந்தார்.
ஆனால் ரணில்விக்கிரமசிங்க ஒருமுறை அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டவுடன் நாமல், தனது வழமையான சண்டியன் பாணியில் பேசுகின்றார் எனவும் நிமால் லான்ச விசனம் வெளியிட்டார்.