32 ஆண்டுகளா சிறைச்சாலை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நளினி!

Rajiv Gandhi Attempted Murder India
By Shankar Nov 13, 2022 09:58 AM GMT
Shankar

Shankar

Report

‘‘விடுதலைக்குப் பின்னர் என் கணவர் சொன்னது, ‘நீ என் மகாராணி. நீ யாரிடமும் கையேந்தக் கூடாது. நான்தான் உன்னை பார்த்துக்கொள்வேன்’ என்றார். அவர் உள்ளவரை எனக்கு கவலையில்லை’’ என்று நளினி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரும் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.  

32 ஆண்டுகளா சிறைச்சாலை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நளினி! | Nalini Shared Her Experience Of 32 Years In Prison

விடுதலைக்குப் பின்னர் வேலூர், காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் இரவு செய்தியாளர்களை நளினி சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘‘32 வருஷம் போய்விட்டது. இதுக்கு அப்புறம் என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது. அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி.

எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு இதுவரை 5 பைசாகூட கொடுத்தது கிடையாது. என் வழக்குச் சம்பவத்தில் இறந்துபோன நபர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

32 ஆண்டுகளா சிறைச்சாலை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நளினி! | Nalini Shared Her Experience Of 32 Years In Prison

அவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா, இல்லையா? என்பதையும் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். ‘அப்பா, அம்மா இருவரும் கடைசியில் கிடைத்துவிட்டார்கள்’ என்று என் மகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாள்.

‘நல்லா என்ஜாய் பண்ணுமா. இந்த விடுதலையை சந்தோஷமா ஏத்துக்க’ என்று சொன்னாள். என்னால்தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

நானும் என் கணவரும் மகளிடம் செல்ல விரும்புகிறோம். தற்போதைய தமிழக ஆளுநர் காவல்துறையில் இருந்தவர். என் வழக்குச் சம்பவத்தில் அவரின் துறையைச் சார்ந்த 7 பேர் இறந்துவிட்டார்கள்.

32 ஆண்டுகளா சிறைச்சாலை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நளினி! | Nalini Shared Her Experience Of 32 Years In Prison

அப்படியிருக்கும்போது, ஆளுநர் எப்படி எங்களுக்கு விடுதலைக் கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்க முடியும்’’ என்றவரிடம், ‘‘பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

அதை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘32 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டோம்.

அவர்களுக்கு திருப்தியில்லையா?’’ என்றவரிடம், ‘‘சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை சந்திப்பீர்களா?’’ என்று மற்றொரு கேள்வியை முன்வைத்ததற்கு, ‘‘அய்யோ சாமி! ஆளைவிடுங்க. அவர்களை சந்திக்க வாய்ப்பே இல்லை’’ என்றவர் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

32 ஆண்டுகளா சிறைச்சாலை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நளினி! | Nalini Shared Her Experience Of 32 Years In Prison

‘‘சிறையில் இருந்த சமயத்தில், ஐ.ஜி ஒருவரின் உதவியுடன் நான் படித்தேன். அவர்தான் என்னை படிக்கச் சொல்லி வற்புறுத்தினார். சிறைச்சாலை அனுபவம் என்பது நரகம், சுடுகாடு, சாக்கடை, புதைக்குழி போல இருந்தது.

யாராலும் போக முடியாத பெரிய யூனிவர்சிட்டியும் சிறைதான். அங்கு பொறுமை, நிதானம், மரியாதையாக பேசுவதைக் கற்றுக்கொண்டேன். இனிமேலும் நான் நானாகவே இருக்கப் போகிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள். நீங்கள் கொலைகாரியாக பார்க்கிறீர்களா, என்னைப் பார்த்தால் கொலைகாரியைப் போல தெரிகிறதா? அதுவும் 17 பேர் கொலை! ஆளுக்கொரு கருத்து இருக்கும். மாற்றுக் கருத்து இருப்பவர்கள் பற்றி எதுவும் சொல்ல முடியாது. அனைவரின் கருத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சத்தியமாக பொதுவாழ்க்கைக்கு வரமாட்டேன். ஒரு சாதாரண மனுஷியாக என் மகள், கணவருடன் வாழ விரும்புகிறேன். என் மகளிடம் கிரீன் கார்டு இருக்கிறது. விரைவில் எங்கள் இருவரையும் அழைத்துக்கொள்வதாகக் கூறியிருக்கிறாள்.

சிறையில் இருந்தபோது, ஆன்மிகத்திலும் யோகாவிலும் அதிக நாட்டம் செலுத்தினேன். நேரமே போகாது. இந்த விடுதலையை மிராக்கிளாகவே என் கணவர் முருகன் பார்க்கிறார்.

இன்னும் தாமதமாகும் என நினைத்திருந்த நிலையில் இந்த விடுதலை பெரும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. பேரறிவாளனும் நானும் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை முயற்சித்துக்கொண்டே இருந்தோம்.

எழுவர் விடுதலை; திடீரென ஒருவர் விடுதலை என வந்தபோது, உடைந்துபோய்விட்டோம். விடுதலைக்குப் பின்னர் என் கணவர் சொன்னது, ‘நீ என் மகாராணி. நீ யாரிடமும் கையேந்தக் கூடாது. நான்தான் உன்னை பார்த்துக்கொள்வேன்’ என்றார். அவர் உள்ளவரை எனக்கு கவலையில்லை’’ என்று நெகிழ்ச்சியடைந்தார் நளினி.

நளினி இன்று காலை சென்னை புறப்படுகிறார். சென்னையில் அவர் தம்பி வீட்டில் தங்கவிருப்பதாகவும், முதல்வரைச் சந்திக்க நேரம் கிடைத்தப் பின்னர் திருச்சி முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தன் கணவர் முருகனைச் சந்திக்க செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.  

மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Frankfurt, Germany, Toronto, Canada

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Narantanai, யாழ்ப்பாணம், மெல்போன், Australia

25 Sep, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US