இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
தங்காலை - நக்குனுகமுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இருந்து தீக்காயங்களுடன் அமெரிக்க பிரஜை ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த பெண் வழங்கிய தகவலின் பேரில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மர்மமான முறையில் உயிரிழந்த நபர் 54 வயதுடைய அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தங்காலையில் தனது தாயுடன் வசித்து வருவதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த நபரின் தாயார் கடந்த 6 மாதங்களாக திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து வருவதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.