தமிழர் பகுதியில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட விபரீதம்! 30 மாணவர்கள் வைத்தியசாலையில்
திருகோணமலையில் உள்ள மூதூரில் குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் இன்றையதினம் (25-06-2024) இரவு இடம்பெற்றுள்ளது.
மூதூரிலுள்ள பாடசாலை ஒன்றில் மாலை நேர வகுப்புக்குச் சென்ற மாணவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் 30 மாணவர்கள் உடனடியாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.