அரசாங்கத்தில் இசைஞானி இளையராஜா உட்பட பலருக்கு கிடைத்த உயரிய பதவி!
நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா (Ilaiyaraaja), முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா (P. T. Usha), வீரேந்திர ஹெக்டே (Veerendra Heggade), விஜயேந்திர பிரசாத் (V. Vijayendra Prasad) ஆகியோரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் (Ram Nath Kovind) நியமித்துள்ளார்.
ராஜ்யசபா நியமன எம்.பி. இளையராஜா உள்ளிட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மொத்தம் 12 பேர் நியமன எம்.பி.க்கள். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.
தலைமுறைகளைக் கடந்து @ilaiyaraaja அவர்களின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன. pic.twitter.com/qgV1ZlK9lP
— Narendra Modi (@narendramodi) July 6, 2022
2010-ம் ஆண்டு மத்திய அரசு இளையராஜாவுக்கு பத்ம பூஷன் விருதும் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கி சிறப்பித்தது.
1976-ம் ஆண்டு அன்னக்கிளி எனும் தமிழ் திரைப்படம் மூலம் திரை உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. இன்றுவரை 1000-க்கும் மேற்பட்ட திரைப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.
The remarkable PT Usha Ji is an inspiration for every Indian. Her accomplishments in sports are widely known but equally commendable is her work to mentor budding athletes over the last several years. Congratulations to her on being nominated to the Rajya Sabha. @PTUshaOfficial pic.twitter.com/uHkXu52Bgc
— Narendra Modi (@narendramodi) July 6, 2022
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழி திரைப்படங்களுக்கும் ஆங்கில படங்களுக்கும் இசையமைத்துள்ளார் இளையராஜா. சிம்பொனி இசையின் மூலம் உலகை தன் வயப்படுத்தியவர் இளையராஜா.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதி இருந்தார் இளையராஜா. அது மிகப் பெரும் சர்ச்சையானது.
அப்போதே இளையராஜாவுக்கு ஏதோ ஒரு பதவியை மத்திய அரசு தரக் கூடும் என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று இளையராஜா, நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.