தமிழக முதலமைச்சர் விஜய்யை சந்திக்க சென்ற அருச்சுனா எம்பிக்கு ஏமாற்றம்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்திப்பதற்காக சென்னை சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் முதலமைச்சர் விஜயயை அவரால் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
எனினும் தமிழகத்தின் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ராஜ்மோகனைச் சந்தித்த பின்னர், எம்பி அர்ச்சுனா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்காகத் தமிழக முதலமைச்சர் குரல் கொடுக்க வேண்டும்
இதன்போது, தமிழ் மக்களுக்காகத் தமிழக முதலமைச்சர் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அர்ச்சுனா,
முதலமைச்சர் விஜய் அவர்களைச் சந்திக்க முடியும் என்ற பெரிய நம்பிக்கை எனக்கு இல்லை. அவர் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்வை நேரில் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.
ஆனால், அந்த நாட்களில் இலங்கை பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் என்னால் அதில் கலந்துகொள்ள முடியாமல் போனது” என்றார்.
தமிழக மக்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றத்துக்காக இம்முறை வாக்களித்துள்ளனர்” என்று கூறியுள்ளார். இத்தகைய மாற்றம் சாத்தியமில்லை எனப் பல அரசியல் ஆய்வாளர்கள் கூறியபோதிலும், இந்த மாற்றம் நிச்சயம் நடக்கும் என்பதைத் தான் தொடர்ந்து கூறி வந்ததாகவும் அர்ச்சுனா தெரிவித்தார்