ரணில் விக்ரமசிங்கவுடன் சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் ; வெளிவர காத்திருக்கும் அதிர்ச்சி
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பில் இன்னும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டப்போது, மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதுடன் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.