2,000 ரூபாய்க்கும் ஆப்பு வைத்த மோடி!
இந்தியாவில் 2,000 ரூபாய் நாணயத்தாள்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி விரைவில் 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் 2,000 ரூபாய் நாணயத்தாள்களை வங்கிகளிடம் கொடுத்து பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது
ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு பிறகு 2,000 ரூபாய் நாணயத்தாள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.
இந்த நிலையில், 2,000 ரூபாய் நாணயத்தாள் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.
அதேவேளை பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 1000 ரூபாவை புழக்கத்தில் இருந்து அகற்றிய நிலையில் தற்போது 2000 ரூபாவையும் பரிவர்த்தனையில் இருந்து நீக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது