முல்லைத்தீவில் கேக் வாங்கப்போன இடத்தில் தாலிக்கொடியை தவறவிட்ட பெண்; வெதுப்பக உரிமையாளர் செய்த செயல்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள தீன்சுவை வெதுப்பகத்துக்கு சனிக்கிழமை(10) முள்ளியவளையில் இருந்து கேக் வாங்க வந்த குடும்ப பெண் ஒருவர் தனது தாலிக்கொடியை தவறவிட்டுள்ளார்.
இந்நிலையில் தவறவிட்ட தாலிக்கொடியை கண்டெடுத்த வெதுப்பக உரிமையாளர், அதுதொடர்பில் புதுக்குடியிருப்பு வணிகர் சங்க தலைவர் நவநீதனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
தொலைத்தவர் தேடிவரும் வரை, அதைப் பத்திரமாக வைத்திருக்குமாறு வணிகர் சங்க தலைவர் தெரிவித்த நிலையில், தாலிக்கொடியைத் தொலைத்தவர்கள் அதனை தேடிவந்த போது , அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டு, வெதுப்பக உரிமையாளரால் தாலிக்கொடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெதுப்பகத்தில் தவறவிடப்பட்ட பெறுமதியான தாலிக்கொடி தங்களுக்கு மீளவும் கிடைத்ததையிட்டு வெதுப்பக உரிமையாளருக்கு தாலிக்கொடியை மீளப்பெற்ற குடும்பத்தினர் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்கள்.