சுகாதாரத்துறை அமைச்சுக்கு அதிரடி பணிப்புரை விடுத்த பிரதமர் ரணில்!
இலங்கையில் உள்ள அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் தொடர்பான ஆவணத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) சுகாதாரத்துறை அமைச்சுக்கு இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது 76 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை உள்ளூர் மருந்து வினியோகஸ்தர்கள் 33 பில்லியன் தொகை நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இதன்மூலம், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் குறித்த புதுப்பிப்பை வழங்குமாறு சுகாதார அமைச்சுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்தார்.
பிரெஞ்சு அரசாங்கத்தினால் நாளை வழங்கப்படவுள்ள மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகளின் கையிருப்பு காரணமாக நாட்டிலுள்ள அனைத்து அவசர சத்திரசிகிச்சை நிலையங்களிலும் தொடர்ந்து 90 நாட்கள் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
இதற்கிடையில், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) மருந்துகளை உடனடியாக கொள்முதல் செய்கிறது.
மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுயாதீன குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.