பாடசாலை மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சு எடுத்துள்ள அதிரடி முடிவு!
நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களை இடைநிலை தரங்களுக்கு இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு முடிவை செய்துள்ளது.
அதற்கமைய அரச பாடசாலைகள், அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் எதிரவரும் காலங்களில் விளையாட்டு திறன்களின் அடிப்படையில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை அனுமதிக்காது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், இதனுடன் சம்மந்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை கல்வி அமைச்சு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.