அமைச்சர் காமினி லொக்குகே சாரதி கொலை விவகாரம்! வெளியான பகீர் பின்னணி
அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி தனிப்பட்ட பகை காரணமாக பிலியந்தலை – மாவிட்ட பகுதியில் நேற்று முன்தினம் (21-03-2022) கொலை செய்யப்பட்டார்.
வாகன சாரதி கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் களுபோவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேக நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை, சந்தேக நபரின் தந்தை மற்றும் சகோதரன் பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி, வாள், இரண்டு உடைக்கப்பட்ட கண்ணாடி போத்தல்கள் மற்றும் தடி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் தாய் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி தனது வீட்டிற்கு அருகில் இருந்த போது மற்றுமொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு முன்னால் பலத்த சத்தம் எழுப்பியவாறு மோட்டார் சைக்கிள் ஒன்று பலமுறை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது கொலை செய்யப்பட்ட நபர் வீட்டை விட்டு வெளியே வந்து, சத்தம் தொல்லையாக இருந்ததால், மோட்டார் சைக்கிள் சாரதியை எச்சரித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கும்பலுடன் வந்து குறித்த நபர் மீது கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அமைச்சரின் வாகன சாரதி பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான தகவலுக்கு...
எரிசக்தி அமைச்சரின் சாரதியை கொடூரமாக கொலை செய்த இனந்தெரியாத கும்பல்!
அமைச்சரின் சாரதி கொலை விவகாரம்; பிரதான சந்தேக நபர் சிக்கினார்