கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நேரில் சென்ற அமைச்சர் தேவானந்தா!
கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் , அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார்.
இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பிலும் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் மற்றும் வைத்தியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டார்.
தீ விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயவியல் பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கிளிநொச்சி மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பல மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியிருந்தது. எனினும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து! அழிந்தன பல மருத்துவ உபகரணங்கள்