வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஐ.நா செயலாளர் வெளியிட்ட செய்தி!
தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் கௌதம புத்தரின் போதனைகளான சகிப்புத்தன்மை, கருணை, மனிதாபிமானம் ஆகிய பண்புகளை பின்பற்றி நடப்பது இன்றியமையாததாகும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) வலியுறுத்தியுள்ளார்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியிலேயே ஐக்கிய நாடுகள் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
கௌதம புத்தரின் பிறப்பு மற்றும் பரிநிர்வாணமடைதலைக் குறிக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கும் அவர்,
இந்த தினத்தை கொண்டாடுவதன் நோக்கத்துக்கும் ஐ.நா சபையின் இலக்குகளுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கிடையிலான புரிந்துணர்வு, நிலையான அமைதி மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்பனவே அவையாகும் என்றும் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.