மனுஷ நாணயக்கார இடத்துக்கு பந்துல லால் பண்டாரிகொட... வெளியான வர்த்தமானி
மனுஷ நாணயக்காரவின் வெற்றிடமான எம்.பி பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு பந்துலால் பண்டாரிகொடவை நியமிக்கத் தீர்மானித்து அவரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தது.
இவ்வாறான நிலையில் பந்துல லால் பண்டாரிகொடவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னணியில் குறித்த இருவரும் அமைச்சுப் பதவிகளில் இருந்தும் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.