கொழும்பு சிறைச்சாலைகளில் பரவும் நோய்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
கொழும்பில் உள்ள சிறைச்சாலைகளில் தட்டம்மை நோய் பரவி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, சமீப நாட்களில் மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளிலும் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் பதிவாகியுள்ளனர்.
தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 30 கைதிகள் தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், தட்டம்மை நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சிறைச்சாலையில் தடுப்பு ஊசி போடும் திட்டத்தையும் சிறைச்சாலை திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
மேலும், சிறைத்துறை அதிகாரிகளின் விருப்பப்படி உரிய தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.