மயோனைஸ் தடை மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மயோனைஸ் பயன்படுத்த தடை செய்யப்பட்ட நிலையில் அந்த தடையானது மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மயோனைஸ் சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும்.
முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சான்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

உணவு நச்சுத்தன்மை ஏற்படுவதாகப் புகார்கள்
இந்த உணவுப்பொருட்களுக்கு அதிகளவு சுவையை கூட்டுவது இந்த மயோனைஸ் தான்.
ஆனால் ஷவர்மா போன்ற உணவுகளுடன் பரிமாறப்படும் மயோனைஸால் உணவு நச்சுத்தன்மை ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்ததையடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த மயோனைஸ் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை செய்யப்பட்டது.
இந்த தடை கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் மீதான தடையை அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து இருப்பதால் மயோனைஸை விரும்பி சாப்பிடுபவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.