திடீரென அதிகரித்த விலையால் பாரிய பாதிப்புகளுக்குள்ளான பெருந்தோட்ட மக்கள்!
நாட்டில் திடீரென உயர்ந்த கோதுமை மாவின் விலையால் பெருந்தோட்ட மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்த விலை அதிகரிப்பு மக்களை மீண்டும் வறுமை நிலைக்கு கொண்டுவந்துள்ளது.
இதேவேளை, ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒரு நாளுக்கு 3 அல்லது 5 கிலோ வரை கோதுமை மாவை உணவிற்காக பயன்படுத்துகின்றார்கள். பொருட்களின் விலைகளை அதிகரித்ததனை தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தோட்டத்தொழிலாளரகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கோதுமை மா அதிகரிப்பின் காரணமாக கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் அனைத்து பேக்கரி உணவு பொருட்களும் அதிகரித்துள்ளன. தங்களது நாளாந்த உணவின் பெரும் பகுதியினை தோட்டத் தொழிலாளர்கள் கோதுமை மாவின் மூலமே பூர்த்திசெய்து வருகின்றனர்.
இதனையடுத்து, காலை வேளையிலும், இரவு வேளையிலும் அவர்களுக்குரிய நேரத்திற்கு ஏற்ப கோதுமை மாவினை பயன்படுத்தியே அவர்கள் தங்களுக்கு தேவையான உணவினை தயாரித்து கொள்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் குறைந்த சம்பளம் வாங்கும் தோட்டத் தொழிலாளர்கள் தற்போது அதிகரிக்கப்பட்ட மாவின் விலையால் தாங்கள் மேலும் மேலும் பொருளாதார சுமைக்கு தள்ளப்படுவதாகவும், பொருட்களின் விலை அதிகரிப்பு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.