அஸ்வெசும நிதியில் மாபெரும் மோசடி ; மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் மேலும் 2 முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சென்றடைய வேண்டிய அஸ்வெசும கொடுப்பனவை, தங்களது மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் முறைகேடாக வரவு வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 அரச ஊழியர்களில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர் ஒருவர் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக ஹட்டன் காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.