மட்டக்களப்பு தொண்டு நிறுவனத்தில் பாரிய நிதி மோசடி!

Batticaloa Sri Lankan Peoples Crime
By Sahana Apr 08, 2025 07:20 AM GMT
Report

மட்டக்களப்பில் பல முக்கிய பிரபலங்கள் அங்கத்துவம் வகிக்கும் மிகப்பழமையான சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பாரிய நிதி மோசடி ஈடுபட்ட நபர்கள் ஆதாரங்களுடன் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல வருடங்களாக தொடர்ச்சியாக நிறுவனத்தின் பெயரில் ஒரு திருட்டு வங்கிக்கணக்கை நடத்தி அதன் மூலம் பல மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்து கொண்டிருந்த பிரபல தனியார் வங்கியின் முன்னாள் முகாமையாளரும் அதன் முன்னாள் பிராந்திய முகாமையாளரும் ஆதாரங்களுடன் பிடிபட்டதாக நம்பகமான தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

மட்டக்களப்பு தொண்டு நிறுவனத்தில் பாரிய நிதி மோசடி! | Massive Financial Fraud Oldest International Ngo

பல மில்லியன் ரூபாய்  மோசடி

இந்த நபர்களில் ஒருவர் ஏற்கனவே குறித்த வங்கியிலும் பல தடவைகள் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர் என்பதும் பலரும் அறிந்த விடயமாகும். வங்கி கடன் மற்றும் பல தேவைகளை முடித்துக்கொடுப்பதற்காக பலவிதமான இலஞ்சங்களை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதில் பா..யல் இலஞ்சமும் ஒரு வகையாகும் இதற்காக ஊர் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டது பொத்துவில் மக்கள் அறிந்ததே.இது தொடர்பாக தெரியவருவதாவது,

யாழ் யுவதியின் செயலால் மனமுடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளை!

யாழ் யுவதியின் செயலால் மனமுடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளை!

குறித்த சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பொருளாளராக இருந்த ர வில் பெயர் தொடங்குபவர் அதேவேளை தனியார் வங்கியில் முகாமையாளராகவும் இருந்தார்.

இரண்டு பதவிகளையும் வகித்த வேளை தொண்டு நிறுவனத்தின் கூட்டத் தீர்மானம் என கூறி இரு ர எழுத்துக்களை ஆரம்ப எழுத்தாக கொண்ட இருவர் தயாரித்த போலி அறிக்கையினை அவர்களே உறுதிப்படுத்தி வங்கிக்கு அனுப்பியுள்ளனர். இது உறுப்பினர்களுக்குத் தெரியாது.

இலங்கையில் யாசகம் பெறுபவர்களை அகற்ற நடவடிக்கை

இலங்கையில் யாசகம் பெறுபவர்களை அகற்ற நடவடிக்கை

நன்கொடைகள் போலிக் கணக்கிற்கு 

பிரபல தனியார் வங்கியின் முகாமையாளர் அதிகாரத்தினை பயன்படுத்தி போலி விண்ணப்பத்தினை சரியானதென தாமே ஏற்றுக்கொண்டு அதை குறித்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வங்கிக்கணக்காக பிரகடனப்படுத்தியும் விட்டனர்.

இதன் பின்பு இருவரும் பதவி நிறுவனத்தில் பதவி வகித்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நன்கொடைகளையும் அறவீடுகளையும் போலிக் கணக்கிற்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தனர்.

பின்பு அதே அதிகாரத்தினை பயன்படுத்தி போலியாக செயற்படுத்திய வங்கிக்கணக்கிலிருந்து சகல வைப்புகளையும் மீளப் பெற்று வந்துள்ளனர்.

முன்னாள் இராஜாங்க வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் இராஜாங்க வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பணம் மீளப்பெறலுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் கையொப்பம் இரு எழுத்துக்களை ஆரம்ப எழுத்தாக கொண்ட இருவர் ஆகும். இவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டதால் இது உறுப்பினர்களுக்குத் தெரியவரவில்லை.

தற்போது நிர்வாகம் மீளமைக்கப்பட்போது தொண்டு நிறுவனத்திற்கு இரண்டு வங்கி கணக்குகள் இயங்குவது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஆரம்ப உள்ளக புலனாய்வின் போது மோசடி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது இதற்கு ஆதாரமாக முதலாவது அதே இரு ர எழுத்துக்களை ஆரம்ப எழுத்தாக கொண்ட இருவர் கையொப்பமிட்டு வங்கிக்கணக்கு மூடப்பட்டு விட்டது.

தற்போது உண்மையான கணக்கு மட்டுமே செயற்படுகிறது. இரண்டாவது, விளக்கம் கோரிய போது நடந்தது உண்மைதான் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறி தங்களுக்கு சலுகை கோருகின்றனர்.

மறுபக்கமாக நிறுவன உறுப்பினர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தி தப்பிக்க முயற்சி நடக்கிறது. ஆதலால் இவ்வாறான சதிவலைக்குள் கற்றோர் அங்கத்தவர்களாகக் கொண்ட சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் சிக்கக் கூடாது.

ஓடும் பேருந்தில் ஆசிரியையின் மோசமான செயல்; மாணவிக்கு பளார்!

ஓடும் பேருந்தில் ஆசிரியையின் மோசமான செயல்; மாணவிக்கு பளார்!

உறுப்பினர்களின் உழைப்பினையும் நன்கொடைகளையும் சூறையாடியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் பல மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்து ஏழை மக்களுக்குச் சேர வேண்டிய வாழ்வாதார உதவிகளை கொள்ளையடித்த பணத்தை மீளப்பெற நடவடிககை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் குரலாக ஓலிக்கிறது. 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US