இலங்கையில் பெரும் சோக சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தாய்!
மஸ்கெலியாவில் பெண்ணொருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி பேராதனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் 6 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலியா பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான, 44 வயது சிவகுமார் அந்தோனி டெரிண்டா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் மஸ்கெலியா கிலன்டில் பிரிவில், 19 ம் திகதி பணிபுரிந்து கொண்டு இருந்த போது, குளவி கொட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் மாற்றப்பட்டார்.
இருப்பினும், மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளார்.