திருமணம் செய்து கொண்ட ரயில் கழிவறைக்குள் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர்!
அண்மையில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இரவு பயணித்த புகையிரத கழிவறையினுள் பச்சிளம் கைக்குழந்தை ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
இன்றைய தினம் மீட்கப்பட்ட குழந்தையின் தாயும், தந்தையும் திருமணம் செய்துகொண்டதாக கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் குழந்தையின் தந்தையால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் ஊடாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசியை ஒப்படைக்குமாறு கோரி குழந்தையின் தந்தை உரிய மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதன்போது குழந்தை தொடர்பில் கோட்டை நீதவான் விசாரித்த போது, கடந்த 18ம் திகதி இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும், பிள்ளையும் மனைவியும் கொஸ்ஸின்ன பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருப்பதாகவும் குழந்தையின் தந்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திருமண சான்றிதழையும் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
நன்னடத்தை அதிகாரியின் மேற்பார்வையில், கடுமையான நிபந்தனைகளின் கீழ் குழந்தையை பெற்றோரின் பாதுகாப்பில் வைக்குமாறு கடந்த 17ம் திகதி உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் எதிர்கால நன்னடத்தை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.