வாய்க்காலினுள் விழுந்த கடற்படையினரின் பேருந்து; 3 வீரர்களுக்கு நேர்ந்த நிலை!
Sri Lanka Police
Hospitals in Sri Lanka
Accident
By Sundaresan
வாகரையிலிருந்து திருகோணமலை நோக்கி கடற்படையினரை ஏற்றிக்கொண்டு பயணித்த கடற்படைக்குச் சொந்தமான பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலினுள் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று கடற்படை வீரர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று(10) திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பட்டித்திடல் வாய்க்காலிலே இவ் பேரூந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US